தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/13
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
18/05/ 2013.
மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013
அன்பான தமிழ்பேசும் மக்களே,
இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.
ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.
எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளே தமிழர் இனவழிப்பைச் சுட்டும் பொதுநாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.







