தமிழர் இனவழிப்பு நினைவுநாள்

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                            த/செ/ஊ/அ/03/11 தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம்.
03/05/ 2011.            

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011

 

அன்பான தமிழ் மக்களே,

காலங்காலமாக தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில்  நிகழ்த்தப்பட்டு வருகின்றன.   மொழிச் சீரழிப்புக்கள், படுகொலைகள்,  நில ஆக்கிரமிப்புக்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள்  உட்பட மனித நாகரிகத்திற்குப் புறம்பான அனைத்து வகையிலுமான அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக தமிழினத்தை அதனது பூர்வீக மண்ணில் இருந்து வேரோடு கருவறுக்கும் இனவழிப்பின்   நடவடிக்கைகளே ஆகும்

 

Last Updated on Monday, 16 May 2011 15:39 Read more...

ஈகைச்சுடர் கிருஸ்ணமூர்த்தி

E-mail Print PDF

 

ஈகைச்சுடர் கிருஸ்ணமூர்த்திக்கு எமது அஞ்சலி

தலைமைச் செயலகம்,                                                                           த/செ/ஊ/அ/03/11
தமிழீழ விடுதலைப்  புலிகள், 
தமிழீழம்.
20/04/ 2011.

தமிழ்நாடு சீகம்பட்டியைச் சேர்ந்த இளம் பொறியியலாளன் இராமுசுப்பு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் தமிழின விடுதலைக்காகவும் தமிழீழ மக்களுக்கு நியாயம் வேண்டியும் தன்னைத்தானே தீமூட்டி ஈகைச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில் பல்லாயிரம் வீரர்கள் தம்முயிர்களை ஆகுதியாக்கிக்கொண்டுள்ளனர்.இவ்வாறு தமிழரின் விடுதலைக்காக புறப்பட்ட பல்லாயிரம் வீரர்களின் தியாகங்களின் வரிசையில் தம்பி கிருஸ்ணமூர்த்தி தன்னையும் இணைத்துக் கொண்டார்.

2009 மே 18 இன் தமிழின அழிப்பின் உச்சத்தில் வெற்றிக்களிப்பில் சிங்களம் இன்னமும் மிதந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை தமிழர் வரலாற்றில் உயிரும் சதையும் கலந்த மறக்க முடியாத மாபெரும் மானிட அழிவின் எச்சத்தைத் தேடியவண்ணம் மனித உரிமை அமைப்புக்கள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. தம்பி கிருஸ்ண மூர்த்தியின் ஈகைச்சாவு இந்த மனித உரிமை அமைப்புக்களின்  மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் என நம்புகின்றோம்.

Last Updated on Thursday, 21 April 2011 00:31 Read more...

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் - 2011

E-mail Print PDF

‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011’

தலைமைச் செயலகம்,                                                                                         த/செ/ஊ/அ/02/11
தமிழீழ விடுதலைப்  புலிகள், 
தமிழீழம்.
19/04/ 2011.

அன்பான தமிழ் மக்களே!

இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்.

எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி சாவடைந்த மக்களை நினைவுகூரும் நாள்.

எமது அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குக் கவசமாக நின்று தம்மை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவுநாள்.

‘இந்திய அமைதி காக்கும் படை’ என்ற போர்வையில் அன்னியப் படைகள் எமது மண்ணில் காலூன்றியிருந்த காலத்தில் அப்படையை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய அன்னை பூபதியின் மறைவு நாளே ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்’ என நினைவுகூரப்படுகின்றது. அடக்குமுறைக்கெதிராக எமது மக்களை அணிதிரட்டிப் போராடிய அன்னை பூபதியின் தியாகம் எமது போராட்டப் பாதையில் முக்கிய மைற்கல்.

Last Updated on Thursday, 21 April 2011 00:26 Read more...

தேசத்தின் பேரன்னை’ பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி

E-mail Print PDF

‘தேசத்தின் பேரன்னை’ பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி

தலைமைச் செயலகம்,                                                                                             த/செ/இ/செ/01/11 தமிழீழ விடுதலைப்  புலிகள், 
தமிழீழம்.
20/02/ 2011.

அன்பான தமிழ் பேசும் மக்களே!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (20/02/2011) வல்வெட்டித்துறையில் காலமானார். அன்னை பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய அந்தப் பெருவிருட்சம் இன்று கண்மூடித் துயில்கின்றது.

Read more...

ஊடக அறிக்கை - பெப்ரவரி 08

E-mail Print PDF

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடைநீக்கும் சட்டரீதியான போராட்டங்களை வரவேற்கின்றோம்.

தலைமைச் செயலகம்,                                                                           த/செ/ஊ/அ/01/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,  
தமிழீழம். 

08/02/ 2011.

அன்பார்ந்த தமிழ் மக்களே,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் விடுதலைப் பற்றைச் சிதறடித்து, உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தனது கபடத்தனமான இராஜதந்திர அணுகுமுறையால் பயங்கரவாத அமைப்பாக உலகின் கண்முன் காட்டியது. இப்போதும் சிங்கள அரசு புதிய புதிய உத்திகளை வகுத்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களால் உருவாக்கப்படும் ஜனனாயகக் கட்டமைப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உப அமைப்புக்களாகக் காட்டி அவ்வமைப்பைச் சட்டச் சிக்கலுக்குள் தள்ள முயற்சிக்கின்றது. 

Read more...

Page 6 of 8