தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/03/11 தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03/05/ 2011.
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011
அன்பான தமிழ் மக்களே,
காலங்காலமாக தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மொழிச் சீரழிப்புக்கள், படுகொலைகள், நில ஆக்கிரமிப்புக்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் உட்பட மனித நாகரிகத்திற்குப் புறம்பான அனைத்து வகையிலுமான அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக தமிழினத்தை அதனது பூர்வீக மண்ணில் இருந்து வேரோடு கருவறுக்கும் இனவழிப்பின் நடவடிக்கைகளே ஆகும்







