தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள்-2010

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                              த/செ/ஊ/அ/07/10

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

10/10/2010.

 

அன்பார்ந்த தமிழீழ மக்களே,

இன்று தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள். இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் சமூக அடக்குமுறைக்கெதிராகவும் போராடப்புறப்பட்ட தமிழீழப் பெண்களுக்கு வழிகாட்டியான வித்தொன்று வீழ்ந்தநாள். பெண்களால் இயலாதென மூலையில் முடங்கிக் கிடந்த ஒரு சமூகத்திலிருந்து வீறுடன் புறப்பட்டுவந்து விடுதலைப் போர்தொடுத்த பெண்களின் புரட்சிகர நாள்.

எமது விடுதலை இயக்கத்தில் களச்சாவடைந்த முதற் பெண்போராளியான இரண்டாம் லெப்ரினன்ட் மாலதி (பேதுறு சகாயசீலி) அவர்களின் நினைவுநாளே தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகும். எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் தந்திரத்தோடும் நாசகாரத் திட்டத்தோடும் கால்பதித்திருந்த அந்நியப் படைகளுக்கெதிரான போரில் இரண்டாம் லெப்ரினன்ட் மாலதி அவர்கள் வீரச்சாவடைந்தார். இனவிடுதலை, பெண்விடுதலை, சமூகவிடுதலை என்ற கோட்பாட்டுத் தளங்களில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் ஆயிரமாயிரம் பெண்கள் பங்குகொண்டு எமது போராட்டத்தைச் செழுமைப்படுத்தினார்கள்.

Last Updated on Monday, 08 November 2010 08:30 Read more...

தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்துமூன்றாம் ஆண்டு நினைவுநாள்

E-mail Print PDF
 தலைமைச் செயலகம்,                                                            த/செ/ஊ/அ/06/10 
 

தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 
26/09/2010


அன்பார்ந்த தமிழ்மக்களே, 

இன்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்துமூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஓர் உயரிய இலட்சியத்துக்காக தன்னையே உருக்கி ஆகுதியாக்கிய அற்புதப் போராளியை நினைவுகூரும் நாள். எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடைவதற்காய் உறுதியுடன் இறுதிவரை பயணித்த வீரனின் மறைவுநாள். தியாகத்தின் உச்சநிலையைத் தொட்டு தன் சாவின்மூலம் ஆதிக்கசக்திகளை வெட்கித் தலைகுனிய வைத்த தியாகச் செம்மலை எம் மனத்திலிருத்திப் பூசிக்கும் புனிதநாள்.


எமது ஈழ விடுதலைப் போராட்டம் மிகப்பெரிய பொறிக்குள் அகப்பட்டிருந்த நேரத்தில்தான் தியாகி திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. அன்னிய சக்திகள் தொடர்பில் எமது மக்களிடமும் ஏனையோரிடமும் இருந்த மாயையைத் துடைத்தழிக்க அகிம்சை முறையிலேயே தனது போராட்டத்தைக் கையாண்டார். மக்களை மாயையிலிருந்து விடுவித்து சரியான வழியில் அணிதிரள வைத்தது திலீபன் அவர்களின் போராட்டமேயாகும்.

 

Last Updated on Monday, 08 November 2010 08:29 Read more...

உயிராயுதமான உன்னதர்களுக்கு வீரவணக்கம்

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                                                   த/செ/ஊ/அ/05/10
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
05/07/2010

இன்று கரும்புலிகள் நாள். எமது உரிமைப் போராட்டத்தினை நசுக்கவும் அடக்கி ஒடுக்கவும் பெரும் எடுப்பில் வந்த பகைவர்களை எல்லாம் தனித்து நின்று தம்மையே அர்ப்பணித்து, தகர்த்து சின்னாபின்னமாக்கிய எம் தேசப்புதல்வர்களின் திருநாள்.

கரும்புலிகள் எம் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். எமது போராட்ட இலட்சியத்தின் உறுதியினை எடுத்துக்காட்டும் குறியீடுகள். எமது மக்களின்  நியாயபூர்வமான அரசியல் வேட்கையினை அடைவதற்கான தடைகளை அகற்றி முன்னே சென்ற அதிசயப் பிறவிகள்.

 

Last Updated on Monday, 08 November 2010 08:32 Read more...

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை

E-mail Print PDF

 

தலைமைச் செயலகம்,                                                        த/செ/ஊ/அ/04/10
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
29/06/2010 

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை.

அன்பான தமிழ் பேசும் மக்களே!

சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற அதே வேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை.

இத்தகைய சூழலில் சிறிலங்கா அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர்.

 

Last Updated on Monday, 05 July 2010 03:18 Read more...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.

E-mail Print PDF

 

தலைமைச் செயலகம்,                                                        த/செ/ஊ/அ/03/10
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
15-06-2010

தலைவர்/துணைத்தலைவர்கள்,
தலைமைக்குழு,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு,
தமிழ்நாடு.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.

Last Updated on Monday, 05 July 2010 03:07 Read more...

Page 8 of 8